ஜெருசலேம்: இஸ்ரேல் - பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் குழுக்கள் இடையே கடந்த மூன்று நாட்களாக சண்டை நடைபெற்ற நிலையில், இரு தரப்பும் தங்களின் தாக்குதலை நிறுத்துவதற்கு நேற்று முன்தினம் ஒப்புக்கொண்டன. இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் 3 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக, பாலஸ்தீன சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்கு கரை பகுதியில் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த இப்ராகிம் அல் நபுல்சியின் வீட்டை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.