திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலில் நேற்று முன்தினம் 74,830 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில், 39,405 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ₹4.79 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.