நொய்டா: உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண்ணை தாக்கிவிட்டு தலைமறைவான பாஜ நிர்வாகி காந்த் தியாகியை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டா பகுதியை சேர்ந்தவர் பாஜ நிர்வாகி காந்த் தியாகி தியாகி. கடந்த வெள்ளியன்று தனது குடியிருப்பில் வசிக்கும் இளம்பெண்ணுக்கும் இவருக்கும் செடிகள் வளர்ப்பது, சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த பெண்ணை காந்த் தியாகி தள்ளி விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.