இளம்பெண் தாக்கிய சர்ச்சை; தலைமறைவான பாஜ நிர்வாகி தியாகி கைது

நொய்டா: உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண்ணை தாக்கிவிட்டு தலைமறைவான பாஜ நிர்வாகி காந்த் தியாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.  உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டா பகுதியை சேர்ந்தவர் பாஜ நிர்வாகி காந்த் தியாகி தியாகி. கடந்த வெள்ளியன்று தனது குடியிருப்பில் வசிக்கும் இளம்பெண்ணுக்கும் இவருக்கும் செடிகள் வளர்ப்பது, சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த பெண்ணை காந்த் தியாகி தள்ளி விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், காந்த் தியாகி தலைமறைவானார். மேலும், கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் சரண் அடைவது தொடர்பான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். இந்த வழக்கு  நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், நொய்டா போலீசார் அவர் தலைமறைவானதாக அறிவித்தனர். மேலும், அவரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ₹25 ஆயிரம் சன்மானமும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மீரட்டில் பதுங்கி இருந்த காந்தையும், அவருடைய கூட்டாளிகள் மூன்று பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories: