டாப்சிலிப்பில் வளர்ப்பு யானைகள் அணி வகுப்பு

ஆனைமலை: பொள்ளாச்சி அருகே உள்ள உலாந்தி வனச்சரகம், டாப்ஸ்லிப் பகுதியில் உலக யானைகள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், உலக பழங்குடியினர் தினம் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பழங்குடியினர் தினம் மற்றும் யானைகள் தினத்தை கொண்டாடும் விதமாகவும், உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு பெறுவதை முன்னிட்டும் யானைகள் அணிவகுப்பு நிகழ்ச்சி டாப்சிலிப் பகுதியில் நேற்று நடந்தது. இதில், யானைகளுக்கு சதுரங்க அட்டையில் உள்ளது போல கருப்பு வெள்ளை சாயங்கள் பூசி, டாப்சிலிப் சீத்தல் ஓய்வு விடுதியில் இருந்து டாப்சிலிப் வரவேற்பு மையம் வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன.c

Related Stories: