ஃபுளோரிடா: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பங்களாவில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது; ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள தனது இல்லத்தில் எஃப்பிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தெற்கு ஃப்ப்ளோரிடாவில் உள்ள தனது கடற்கரை பங்களாவில் சோதனை நடத்தியதாகவும் கூறியுள்ளார். இந்த சோதனை அவசியமற்றது. முறையற்றதும் கூட. 2024ம் ஆண்டு நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை முழுமையாக விரும்பாத தீவிர டெமாக்ரேட் கட்சியினரின் தாக்குதல் இது. நீதி அமைப்பை ஆயுதமாக்கி உபயோகிக்கின்றனர் எனவும் இது குறித்து குற்றம் சாடியுள்ளார்.