தாராபுரம்: மக்களால் உருவாக்கப்பட்ட அதிமுகவை மற்றவர்களால் உடைக்க முடியாது என்று தாராபுரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் நேற்று தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி அங்கு சிறப்பு பூஜையில் பங்கேற்றார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேற்று காலை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வந்தனர். அங்கு நடந்த நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,``இந்த கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் இந்த கட்சியின் நிர்வாகிகள். அதிமுக என்பது மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி. மற்றவர்களால் இதை உடைக்கவும், அழிக்கவும் முடியாது’’என்றார்.