காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் எஸ்.லட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு துறையில் பணியாற்றும் கூட்டுறவு பயிற்சி முடிக்காத நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் 2022-23ம் ஆண்டிற்கான 22வது அஞ்சல் வழி பட்டய பயிற்சி, கூட்டுறவு பயிற்சி 22.8.2022 முதல் தொடங்கப்பட உள்ளது. ஆகவே காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கூட்டுறவு நிறுவனங்களின் பணிபுரியும் தகுதி வாய்ந்த நிரந்தர பணியாளர்கள் இந்த பயிற்சியில் சேரலாம்.