பூந்தமல்லி: அய்யப்பன்தாங்கலில் ரூ. 1.31 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இந்த ஊராட்சி பகுதியில் மழைநீர் கால்வாய், மயானபூமி சுற்றுச்சுவர், நடுக்குளம் மேம்பாடு, அரசுப்பள்ளி கழிவறை, ஆதித்தனார் நகர், பால்வாடி தெரு, கேசவர்த்தினி நகர், அற்புதம் அவென்யூ, செம்பருத்தி நகர், வேணுகோபால் நகர், சங்கமித்ரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை, கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வதற்கான ரூ. 1 கோடியே 31 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.