பெரம்பூர்: அயனாவரம் பேருந்து நிலையம் அருகே டிபன் கடை நடத்தி வருபவர் ராஜி (51). இவர் நேற்று காலை வழக்கம் போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது 2 பேர், ராஜியிடம் வந்து பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு ராஜி, ‘‘பணம் தர முடியாது’’ என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ராஜியிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறித்து தப்பினர்.