பெரம்பூர்: வியாசர்பாடி காமராஜ் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (32). பாடி பகுதியில் உள்ள பிரபல தனியார் கம்பெனியில் டெலிவரி ஏஜென்ட்டாக உள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு நண்பர் வினோத்துடன் பெரம்பூர்- மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் நடைபெற்ற ஒரு கோயில் திருவிழாவிற்கு வந்திருந்த 8க்கும் மேற்பட்டோர், வெங்கடேசனிடம் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேசனின் தலை, காது மற்றும் பின்பக்க தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினர். இதில் படுகாயமடைந்த வெங்கடேசன் மயங்கி விழுந்தார்.