புதுடெல்லி: வரும் 12ம் தேதி முதல் நடக்கவிருந்த யுஜிசி நெட் 2ம் கட்ட தகுதி தேர்வு செப்.20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று யுஜிசி தலைவர் தெரிவித்தார். கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. தேர்வில் வெற்றி பெறுபவர்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்படுவர். இந்த ஆண்டு 2021 டிசம்பர் மற்றும் 2022 ஜூன் ஆகிய 2 வருட தேர்வுகளை ஒருங்கே நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை(என்டிஏ) அறிவித்திருந்தது.