அம்பத்தூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சிலர் ரேஷன் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதாக வந்த புகாரின் பேரில், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஆவடி கர்லப்பாக்கம் கருநீகர் தெருவில் உள்ள காலி மனையில், சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த மினி வேனை, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் சசிகலா மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.