கான்பூர்: உத்தர பிரதேசத்தில் 30 ஆண்டுகளுக்கு முந்தைய ஆயுத சட்ட வழக்கில் அமைச்சர் ராகேஷ் சச்சானுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு காதி மற்றும் கிராமத் தொழில்கள், பட்டு வளர்ப்பு, கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக இருப்பவர் ராகேஷ் சச்சான். இவர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்று கடந்த 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.