திருமங்கலம்: திருமங்கலம் அருகே மினிவேனில் கடத்திய 80 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகருக்கு தகவல் வந்தது. இதனைதொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலை கண்காணிக்கும்படி வருவாய்த்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். நேற்று இரவு திருமங்கலம் ஆர்டிஓ. அபிநயா, தாசில்தார் சிவராம், வருவாய் ஆய்வாளர்கள் திருமங்கலம் டவுன் அருண்குமார், கொக்குளம் சுமன், மைக்குடி விஏஒ பாலமுருகன் அடங்கிய குழுவினர் திருமங்கலம்-மதுரை விமானநிலையம் ரோட்டில் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.