மதுக்கரை: கர்நாடகாவில் இருந்து கோவை வழியாக ராணுவ ரோடார் கட்டுப்பாட்டு அறைகள் இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு பிரிவில் ஏராளமான பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நவீன தொழில்நுட்பங்களில் அடிக்கடி மேம்படுத்துதல் பணி செய்ய வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில், ராணுவத்தில் பாதுகாப்பு பணிகளுக்கும், எதிரிகளுடனான சண்டைக்கும் பயன்படுத்தப்படுகின்ற ரேடார் கருவிகள் அடங்கிய கட்டுப்பாட்டு அறைகளுக்கான உபகரணங்களை மேம்படுத்த ராணுவம் திட்டமிட்டது. அதன்படி, 18 உயர்ரக கருவிகளை உள்ளடக்கிய கட்டுப்பாட்டு அறைகளில் நவீன தொழில் நுட்பத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டு அவற்றை இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்புகின்றனர்.