கோவை: கோவை எமரால்டு நகைக் கடையில் மேற்பார்வையாளர் ஜெகதீஸ் போலி கணக்கு காட்டி ரூ.55 லட்சம் மோசடி என புகார் அளிக்கப்பட்டது. தங்கத்தை பட்டறைகளுக்கு தந்து, நகைகளாக வாங்கிய போது, அவர் மோசடி செய்தது கண்டறியப்பட்டது. கையாடல் செய்த பணத்தை ஆன்லைன் ரம்மி மூலம் இழந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியானது.