திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு அக்டோபர் மாதம் விஜயவாடாவில் நடக்கிறது. பாஜ அரசு மக்கள் விரோத கொள்கைகளை அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் பின்பற்றுகிறது. பாஜ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்தியாவில் வறுமை வளர்வதாக உலக கருத்து கணிப்புகள் சொல்கின்றன. பசியுடன் மக்கள் இருக்கிறார்கள். வேலையின்மை இருக்கிறது. இந்தியாவில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் மயமாக்கப்படுகின்றன. அம்பானி, அதானி போன்ற முதலாளிகளுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு செயல்படுகிறது.