திருவாரூர்: திருவாரூரில் திருமணம் செய்துகொள்ள போலீஸ்காரர் மறுத்ததால் பணியிலிருந்த பெண் போலீஸ் கத்தியால் கையை கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா ஆரியலூரை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சரண்யா(30). 2018ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த இவர் திருவாரூர் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பிரிவில் தர்மபுரியை சேர்ந்த சீனிவாசன்(31) என்பவரும் பணியாற்றி வருகிறார். இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சரண்யாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி வந்த நிலையில் சீனிவாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னைக்கு மாறுதலாகி சென்றுவிட்டார்.