தொடர்ந்து 12 மணிநேரம் 1330 திருக்குறளுக்கேற்ப பரதநாட்டிய கலைஞர்கள் நடனமாடி சாதனை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஏற்ப இரண்டரை வயது முதல் 42 வயது வரையிலான பரதநாட்டிய கலைஞர்கள் நடனமாடி சாதனை படைத்துள்ளனர். மயிலாடுதுறையில் பரதநாட்டியத்தில் உலக சாதனை முயற்சியாக 1330 திருக்குறளுக்கும் 12 மணி நேரம் நாட்டியமாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.  தமிழ் இலக்கியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்த உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. இந்த நடன திருவிழாவில் மாநிலம் முழுவதும் 50 கலைஞர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் இரண்டரை வயது முதல் 42 வயது வரையிலான பரதநாட்டிய கலைஞர்கள் 1330 திருக்குறள்களில் ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஏற்ப நடனமாடினர். நேற்று காலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்த நாட்டிய திருவிழா மாலை 6.30 மணி வரை அதாவது தொடர்ந்து 12 மணி நேரம் நடந்தது. இந்த சாதனை முயற்சியை நோபல் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு பதிவு செய்தது.

Related Stories: