பர்மிங்காம்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்று அசத்தியுள்ளார். 72 நாடுகள் இடையிலான காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்து வருகிறது. இந்திய வீரர், வீராங்கனைகள் கணிசமான பதக்கங்களை அறுவடை செய்து ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், காமன்வெல்த் தொடரில் முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்று பி.வி.சிந்து அசத்தியுள்ளார். முன்னதாக, கடந்த அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூரின் யோ ஜியா மின்னை 21-19, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தார்.