நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி: செல்லூர் ராஜூ அதிரடி

மதுரை:  நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சம்பத்து-புதுக்குளம் பகுதியில் தொகுதி மேம்பாடு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்எல்ஏ, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை ஏற்கும், அதில் மாற்றமில்லை. அதிமுக எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்’ என்றார். தமிழகத்தில் பாஜ தலைமையில்தான் கூட்டணி என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பேசி வரும் நிலையில் செல்லூர் ராஜூவின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: