பாட்னா: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் எந்நேரமும் வெளியேறக்கூடும் என்று தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை விட ஐக்கிய ஜனதா தளம் குறைந்த இடங்களை பிடித்தாலும் நிதிஷ் குமார் முதலமைச்சர் ஆனதில் இருந்தே அங்கு இரு கட்சிகளுக்கும் இடையே உரசல்கள் தொடர்கின்றன. அண்மை காலமாக உரசல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் நிதிஷ்குமார் பங்கேற்பதை தவிர்த்துவிட்டார். ஒன்றிய அரசின் நிகழ்ச்சிகளை அவர் புறக்கணிப்பது இது 5வது முறையாகும்.