திருப்பூர்: காலத்தின் தேவை கருதி கம்யூனிஸ்ட கட்சிகள் ஒன்று பட வேண்டும் என திருப்பூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ேதசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கூறினார். இது குறித்து அவர் திருப்பூரில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பாஜ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்தியாவில் வறுமை அதிகரிப்பதாக சர்வதேச கருத்து கணிப்புகள் சொல்கின்றன. பசியுடன் மக்கள் இருக்கிறார்கள். வேலையின்மை இருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்கள் அழிக்கப்படுவதன் மூலம் சமூகநீதி தகர்க்கப்படுகிறது.