சென்னை: தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதர அட்டை வழங்கப்படும் என சுகாதார துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகம் முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை விநியோகிக்கும் திட்டம் நடைமுறை படுத்தப்படஉள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல் படுத்தப்படும். இந்த அட்டையில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது, தொழில் மருத்துவ குறிப்புகள் இடம் பெற்று இருக்கும். இத்திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே நேரில் சென்று சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்படும்.