சென்னை: மாலை நேர உழவர் சந்தைகளில் அமைத்து, அதன் மூலம் பயிறு வகைகள், சிறுதானியம் உள்ளிட்ட பொருட்களை விற்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த கடைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் 12ம் தேதி திறந்து வைக்கிறார். மறைந்த தமிழக முதல்வராக மு.கருணாநிதி தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகளை கொண்டு வந்தார். ஆனால், கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் உழவர் சந்தைகள் கண்டு கொள்ளாமல் கிடந்தன. திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உழவர் சந்தைகளுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். பாழடைந்து கிடந்த உழவர் சந்தைகள் புதுப்பொலிவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட்டு வருகிறது.