புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் பேருந்துக்காக 45 நிமிடங்கள் காத்திருந்த தனியார் விமான நிறுவன பயணிகள் விமான ஓடுபாதையில் நடந்து சென்றனர். இது குறித்த விசாரணைக்கு டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக தனியார் விமான நிறுவனங்களின் சேவை பல்வேறு குறைபாடுகளால் பிரச்னைக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், ஐதராபாத்தில் இருந்து டெல்லி வந்த தனியார் விமானப் பயணிகள் தங்களை இறங்கும் முனையத்துக்கு ஏற்றி செல்லும் விமான நிறுவனத்தின் பேருந்துக்காக 45 நிமிடங்கள் காத்திருந்தனர்.