பதோகி: உத்தர பிரதேசத்தின் பதோகியில் உள்ள நை பஜார் பகுதியை சேர்ந்த தீபக் சோன்கர் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் இவரை கைது செய்து கோட்வாலி சிறையிலடைத்தனர். இவரது உறவினரான தினா சோன்கர் நகர பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக உள்ளார். காவல் நிலையத்துக்குள் தனது அடியாட்களுடன் நுழைந்த அவர் அங்கிருந்த காவலர்கள் 4 பேரையும் அருகில் காலியாக இருந்த கடைக்குள் வைத்து பூட்டினார்.