புதுடெல்லி: ‘நிர்பயா வழக்குக்கு பின்னர் பலாத்காரத்துக்கு பின் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன’என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘‘டெல்லியில் நிர்பயா பாலியல் மற்றும் கொலை வழக்குக்கு பிறகு பலாத்காரத்துக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு, பெண்கள் அதிகளவில் கொல்லப்படுகிறார்கள்.