தாம்பரம்: பல்லாவரம் அருகே 11 வயது வாய்பேச முடியாத சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஒப்பந்த ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பல்லாவரம் அடுத்த திரிசூலம், மங்கள விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் காளியப்பன் (22). திரிசூலம் ரயில் நிலையத்தில் தூய்மை பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று அதே பகுதியை சேர்ந்த 11 வயது வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியிடம், சாக்லெட் வாங்கி தருவதாக ஏமாற்றி வீட்டு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனிடையே, வெளியில் விளையாடிக்கொண்டிருந்த மகள் காணாததால் அதிர்ச்சியடைந்து பெற்றோர் தேடினர்.