தன்பாத்: ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்ட நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த். கடந்தாண்டு ஜூலை 28ம் தேதி இவர் சாலையில் நடைபயிற்சி சென்றார். சாலையின் ஒரத்தில் பாதுகாப்பான முறையில் சென்று கொண்டிருந்த இவரை, ஒரு ஆட்டோ வேகமாக அவரை குறி வைத்து மோதி கொன்று விட்டு பறந்தது. இந்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் லகான் வர்மா, அவருடைய கூட்டாளி ராகுல் வர்மா ஆகியோரை சிபிஐ கைது செய்தது.