பென்சில்வேனியா: அமெரிக்காவில் எரிவது தனது உறவினர் வீடு என தெரியாமல் தீயை அணைக்க விரைந்து சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர் கண்முன்னே தன்னுடைய 2 குழந்தைகள், மாமனார் உள்ளிட்ட 10 உறவினர்கள் உடல் கருகி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இந்த துயரமான சம்பவம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது. நெஸ்கோபேக் என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு திடீரென ஒரு வீடு முழுவதும் தீ பிடித்தது. வீட்டுக்குள் இருந்தவர்கள் உதவி கேட்டு அபயக்குரல் எழுப்பினர். அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு புகார் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர்.