சாத்தான்குளம் பகுதியில் அதிகரிக்கும் பைக் திருட்டு-சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சாத்தான்குளம் : சாத்தான்குளம், பேய்க்குளம் பஜார் மற்றும் தெருக்களில் நீண்டநேரம் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்குகளை மர்மநபர்கள் நோட்டமிட்டு திருடிச் செல்வது தொடர் கதையாகி வருகிறது. இதுகுறித்த புகார்களின் பேரில் சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருட்டு நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் பைக் திருடர்களை தேடி வருகின்றனர்.

மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி புகைப்படங்களை வெளியிட்டு மர்மநபர்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். பைக்குகளை திருடும் கும்பல், அவற்றை உடைத்து இரும்பு கடைகளில் விற்று விடுவதாக கூறப்படுகிறது. எனவே போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாத்தான்குளம் பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாத்தான்குளம் பகுதியில் இருசக்கர  வாகனங்களை திருடும் நபர்கள் குறித்த சிசிடிவி காட்சி புகைப்படம், சமூக  வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Related Stories: