சென்னை: சென்னை மணலி அருகே 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 29 டன் இரும்பு தகடுகளை கொள்ளையடித்த பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் அண்ணா சாலையை சேர்ந்த ரவிக்குமார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் 16ம் தேதி கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரியில் ஏற்றி வந்த சுமார் 29 டன் எடையுள்ள இரும்பு தகடுகளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் இறக்குவதற்கு லாரி ஓட்டுநர் செல்வத்திடம் கொடுத்து அனுப்பினார். ஆனால் லாரி ஓட்டுநர் செல்வம் 29 டன் இரும்பு தகடு ஏற்றிவந்த லாரியுடன் மாயமானார்.