×

பனிவரகு நாட்டுக்காய்கறி சூப்

செய்முறை:

பனிவரகு அரிசி 20 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு சட்டியில் பசுநெய் சேர்த்து அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும். பிறகு கரம்மசாலா தூள், வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். நன்கு வதங்கியதும், காய்கறிகளை சேர்த்து வதக்கி அதனுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து 3 கப் தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து கடாயை மூடி வைக்கவும். காய்கறிகள் நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!