மதுகுடிக்க பணம் தர மறுப்பு, கட்டையால் நண்பருக்கு அடி; வாலிபர் கைது

அண்ணாநகர்: மதுகுடிக்க பணம் தர மறுத்த நண்பரை கட்டையால் சரமாரியாக தாக்கிய வாலிபரை கைது செய்தனர். சென்னை அமைந்தகரை பி.பி.தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(52). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது நண்பர் நாகூர்மீரான்(51). இவர் கொத்தனார். நேற்று ரமேஷ் மது குடிப்பதற்காக நாகூர் மீரானிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு நாகூர், ‘’தற்போது என்னிடம் பணம் இல்லை’’ என்று கூறியதால் அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் அங்கு கிடந்த உருட்டுகட்டையை எடுத்து நாகூர் மீரானை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த நாகூர்மீரானை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தலையில் 10 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளித்தனர். இதுபற்றி நாகூர் மீரான் கொடுத்த புகாரின்படி, அமைந்தகரை போலீசார் வழக்குபதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: