பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் பெண்கள்: போப் பிரான்சிஸ் தகவல்

வாடிகன்: வாடிகனின் நிர்வாகத் துறைகளில் பெண்களுக்கு முக்கிய பங்கு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் தற்போது ஆண்கள் மட்டுமே இருப்பதாகக்  குறிப்பிட்ட போப், இக்குழுவில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாகத்  தெரிவித்தார். வாடிகனில் கடந்த மாதம் அமலுக்கு வந்த புதிய அரசியல் சாசனம் குறித்து, போப் பிரான்சிஸ், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வாடிகன் நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் தற்போது ஆண்கள் மட்டுமே இருக்கின்றனர்.

இக்குழுவில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறேன். விரைவில் இக்குழுவில் 2 பெண்கள் இடம் பெறுவார்கள். எனினும், இதற்கான முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை. வாடிகனின் நிர்வாகத் துறைகளில் பெண்களுக்கு முக்கிய பங்கு அளிக்கப்பட்டு வருகிறது. வாடிகனின் நீதி மற்றும் அமைதிக்கான துறையின் 2ம் நிலை தலைவராக சகோதரி அலீஸ்ஸாந்தரா ஸ்மெரில்லி கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

Related Stories: