லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அமைச்சர்கள், அதிகாரிகள் பதவி விலகி வந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை இடைக்கால பிரதமராக பதவியில் நீடிப்பதாக போரிஸ் கூறியுள்ளார். கட்சி தலைவர் பதவியை தொடர்ந்து, பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்வதாக தனது இல்லத்தின் முன் உரையாற்றியபோது ஜான்சன் அறிவித்தார்.