மதுரை: மதுரை அருகே குடும்ப தகராறில் மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு மகிளா நீதிமன்றம் ஆயுள்தண்டனையுடன் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த காளீஸ்வரன், அவரது மனைவி மீனா பொண்ணு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016ல் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார்.