பந்தலூர்: பந்தலூர் அருகே தேவாலா அட்டி பகுதியில் காட்டு யானை வீட்டை உடைத்து சேதம் செய்தது.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா அட்டி சேலகட்டை பகுதியில் நேற்று இரவு காட்டு யானை ஒன்று உணவு தேடி குடியிருப்புக்குள் நுழைந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள கூலித்தொழிலாளி நாகலிங்கம் (60) என்பவர் வீட்டின் சமையலறையை உடைத்து சேதம் செய்து சமையறையில் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களையும் வெளியேஇழுத்து ருசித்து சேதம் செய்தது.இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நாகலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சமடைந்த கூச்சலிட்டுள்ளனர். அக்கம் பக்கத்தினர் யானையை விரட்டியுள்ளனர். சிறிது நேரம் அப்பகுதியில் முகாமிட்ட யானை அங்கிருந்து நகர்ந்து வனப்பகுதிக்குள் சென்றது.