புதுச்சேரி அருகே கடன் தொல்லையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்று ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மனைவி, மகள், மகனை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லை காரணமாக குடும்பத்தினரை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் ஆட்டோ ஒட்டுநர் தியாகராஜன், அவரது மனைவி செல்வி, மகள் மற்றும் மகன் ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜனுக்கு கடன் தொல்லை உள்ளிட்ட பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவு முதல் காலை வரை ஆட்டோ ஒட்டுநரின் குடும்பத்தினர் யாரும் வெளியே வரததால் சந்தேகமடைந்த உறவினர்கள் ஜன்னலை திறந்து பார்த்தபோது நான்கு பேரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜன் கடன் தொல்லை காரணமாக மனைவி 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: