சென்னை: நீதிமன்ற உத்தரவுகள் குறித்த காலத்தில் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் எழுதிய கடிதத்தை தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாவிட்டால் மேல்முறையீடு செய்யவும் அறிவுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்திருக்கிறது.