சென்னை: சிதம்பரம் கோயில் நிர்வாகம் மீது தொடர்ச்சியாக பல புகார் வந்த வண்ணம் உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். சிதம்பரம் கோயில் நிர்வாகத்தில் கவனமாக, அழுத்தமாக தமிழக அரசு அடி எடுத்து வைக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் அநியாயங்கள் குறித்து ஊடகங்கள்தான் பேச வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.