காஞ்சிபுரம்: கோயில் நகரம், பட்டு நகரம் என புகழ்பெற்ற காஞ்சிபுரம் நகரின் சுற்றியுள்ள பல பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காக நகருக்குள் வருவது வழக்கம். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் 4 மற்றும் இருசக்கர வாகனத்தில் நகர் முழுவதும் ரோந்து செய்து குற்றங்களை தவிர்த்து வருகின்றனர். மேலும், குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ள நபர்களை கண்டறிந்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளநிலையில் இளைஞர்கள் சிலர் தவறான போதை பழக்கத்தில் பல குற்றங்களை செய்து வருகின்றனர்.