சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் ரயில் நிலையம் தாண்டி புளியங்குடி செல்லும் சாலையில் குளத்தின் மேல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் தடுப்புச்சுவர் சாலையின் அளவிலேயே உள்ளதால் அப்பகுதியில் வரும் வாகனங்கள் திருப்பத்தில் திரும்பும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அந்தப்பகுதி வாகன நெரிசல் அதிகமாக உள்ள பகுதியாகும். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.