வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ந்து நீடித்து வரும் கன மழை காரணமாக பாதுகாப்பு சுவர்கள் இடிந்து, 3 வீடுகள் அந்தரத்திலும், ஒரு வீடு இடிந்தும் சேதம் அடைந்து உள்ளது. வால்பாறை நகராட்சி மைதானத்தின் அருகே 30 அடி உயர பாதுகாப்பு சுவர் மேல் புறம் இருந்த சாந்தா, ஜோசப் ஆகியோர் வீடுகள், பாதுகாப்பு சுவர் மழையால் பலவீனம் அடைந்து விழுந்ததில், வீடுகள் இடிந்து சரிந்தது. இன்று காலை நடந்த விபத்தில் வீட்டில் இருந்தவர்கள் தப்பினர். வால்பாறை காமராஜ் நகரில், வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் பாதுகாப்பு 30 அடி உயர பாதுகாப்பு சுவர் இன்று காலை சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு சுவர் இடிந்ததால் மலைச்சரிவில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.