கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளவிடுதி ஊராட்சியில் விவசாயிகள் விவசாய பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், இதில் ஒரு பகுதியாக செண்டி பூ பயிர் செய்துள்ளார்கள்.இவர்களிடம் இதன் விபரம் கேட்டபோது பூச்செடிகள் கர்நாடகா மாநிலம் ஓசூர் இருந்து தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதற்கு உரிய தொகையை அவர்களது வங்கி கணக்கில் நாங்கள் செலுத்த வேண்டும். அவர்கள் அனுப்பிய செடிகளை தஞ்சையிலிருந்து நாங்கள் சொந்த செலவில் எடுத்து வந்து தயார் செய்து வைத்துள்ள வயல்களில் செடிகளை நடவு செய்கிறார்கள். நல்ல விலைக்கு விற்பனையான பூக்கள் தற்சமயம் கிலோ ஒன்று ரூ.15க்கு விற்பனை ஆவகிறது. ஆகையால் பூக்களை பறிக்கமால் விட்டு விடுவதே சிறந்தது என எண்ணம் வருகிறது.