லண்டன் : இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. கட்சியின் துணை கொறடாவாக செயல்பட்டு வந்த எம்.பி. கிறிஸ் பின்ஷர் இரவு நேர கேளிக்கை விடுதியில் 2 ஆண்களிடம் பாலியல் ரீதியாக அநாகரீகமாக செயல்பட்டதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதையடுத்து கிறிஸ் தனது பதவியை ராஜினமா செய்தார். கட்சியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், கிறிஸ் மீது உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி இங்கிலாந்து நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தனர்.