ஈரோடு: ஈரோடு அருகே 10-ம் வகுப்பு தேர்வில் மகன் தோல்வி அடைந்ததால் தந்தை தற்கொலை செய்துள்ளார். ஈரோடு அம்மாபேட்டை அருகே கல்பாவி தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் அப்புசாமி (45) அவரது மனைவி சுமதி(38) அப்புசாமி சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வருகிறார். சுமதி பவானி அருகே உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சய்(15) மற்றும் சந்துரு(13) என்ற இரு மகன்கள் உள்ளனர். சஞ்சய் மயிலம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். தேர்வு முடிவில் மூன்று பாடத்தில் தேல்வி ஆனதால் அவரது தந்தை அப்புசாமி சஞ்சயை மீண்டும் டுட்டோரியல் காலேஜில் சேர்த்துவிட்டு உள்ளார்.