பீஜிங்: சீனாவில் சர்வதேச விமான சேவைக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவுக்கான விமான சேவை பற்றி சீனா எதுவும் குறிப்பிடவில்லை. சீனாவில் கொரோனா தொற்றைத் தொடர்ந்து, சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சீனாவில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள், தொழில்துறை நிபுணர்கள் இந்தியாவிலேயே தங்க வேண்டியதாயிற்று. இதனிடையே, சர்வதேச நாடுகளுக்கு விதித்திருந்த விசா தடையை சீனா கடந்த மாதம் நீக்கியது. இதைத் தொடர்ந்து அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் நாடுகளை சேர்ந்த மாணவர்கள், ஐடி துறையினர் சீனா திரும்பி வருகின்றனர்.