வேலூர்: பைக், ஜீப் புதையும்படி சாலை அமைத்த விவகாரத்தில் மாநகராட்சி உதவி பொறியாளரை சஸ்பெண்ட் செய்து வேலூர் மேயர் நடவடிக்ைக எடுத்துள்ளார். வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் வேலூர் ேபரி காளியம்மன் கோயில் தெருவில் இரவோடு இரவாக சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கின் இருசக்கரங்களும் புதையும் வகையில் சிமென்ட் கலவைகள் போட்டு சாலை அமைக்கப்பட்டது.